/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
101 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
/
101 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
ADDED : செப் 19, 2024 08:09 AM
ஈரோடு: மிலாடி நபியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. தடையை மீறி மதுபானம் விற்பனை செய்-யப்படுவது குறித்து போலீசார் கண்காணித்தனர். இதில் சீனாபு-ரத்தில், 26 மதுபான பாட்டில்களுடன், வீராச்சிபாளையம் சின்ன மல்லபாளையம் பழனி (எ) கணேசன், 80, மதுவிலக்கு போலீசா-ரிடம் பிடிபட்டார்.
* பெருந்துறையில், 27 மதுபான பாட்டில்களுடன் திருப்பூர் முத்த-னம்பாளையம் பாலாஜி நகர் இரண்டாவது வீதி வினோத், 34, என்பவர் மதுவிலக்கு போலீசாரிடம் சிக்கினார்.* சூளை டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக, 24 மது-பான பாட்டில்களை விற்பனை செய்ய வந்த, ராமநாதபுரம் திட்டுவாடனை உப்பூர் வேல்முருகன், 56, என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.* ஈரோடு செங்கோடம்பள்ளம் அரிஜன காலனியில், 24 மதுபான பாட்டில்களுடன் விற்பனை செய்ய வந்த, செங்கோடம்பள்ளம் அரிஜன காலனியை சேர்ந்த கிருஷ்ணசாமி, 67, என்பவரை வீரப்-பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.