ADDED : மே 10, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சில இடங்களில் மழை பதிவானது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தாளவாடியில்-12 மி.மீ., மழை பதிவானது. பிற
இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): சத்தியமங்கலம்-9, பவானி-6.6, அம்மாபேட்டை-5.4, கொடிவேரி அணை-5.2, பெருந்துறை-5, சென்னிமலை-3 மி.மீ., மழை பதிவானது. சத்தி பகுதியில் ஒரு குடிசை வீடு, மழையால் சேதமானது.