ADDED : ஆக 28, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே கன்னிமார் காடு பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக, சித்தோடு
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,
அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில், நின்றிருந்த நபரை பிடித்து
விசாரித்தனர்.
அப்போது அவர், 150 கிராம் கஞ்சா வைத்திருந்ததும்,
குட்டிதயிர்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல், 29, என்பதும்தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
