/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு
/
ஆசிரியர் கலந்தாய்வில் 150 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 07, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர் கலந்தாய்வு
நடந்து வருகிறது.
ஒன்றிய அளவில் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல்
கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில், 28 பேர் பங்கேற்றனர். இதேபோல்
இடைநிலை ஆசிரியர்கள், ஒன்றிய அளவில் பொது மாறுதல் கலந்தாய்வும்
நடந்தது. இதில், 122 பேர் பங்கேற்றனர். ஈரோடு ஒன்றியத்துக்கு
உட்பட்ட அம்மாபேட்டை, பவானி, ஈரோடு,சென்னிமலை, மொடக்குறிச்சி,
பெருந்துறை, கொடுமுடி பள்ளிகளில் பணியிட மாறுதல் பெற வழிவகை
செய்யப்பட்டிருந்தது.