sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்

/

1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்

1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்

1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்


ADDED : மார் 10, 2024 03:30 AM

Google News

ADDED : மார் 10, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானி அருகே சரக்கு வாகனத்தில், 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே, ஊராட்சி கோட்டை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அந்தியூரில் இருந்து பவானி சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

வாகனத்தில், 33 மூட்டைகளில், 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.வாகனத்தை ஓட்டி வந்தவர் அந்தியூர் ஏரித்தோட்டம் பகுதியை சேர்ந்த வாசு என்ற வாசுவகுமார், 32, என்றும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு விற்பனைக்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். வாசுவகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1,650 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us