ADDED : நவ 03, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த சிவியார்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், 16 வயது இளைய மகள் பத்தாம் வகுப்பு படித்து விட்டு, கேட்டரிங் வேலை செய்தார்.
கடந்த அக்.,20ம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதேபோல் வரதம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி ஜெகதீஷின், 17 வயது மகள் நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இருவரின் புகார்படி, சத்தி போலீசார், சிறுமிகளை தேடி வருகின்றனர்.

