ADDED : பிப் 06, 2026 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பாரதிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன், 23; சோலார் பாலுசாமி ஆர்ச் கிரீன்பார்க் அவென்யூ மணலி கந்தசாமி தெரு மனோகரன் மகன் மதன், 31; கஞ்சா விற்ற வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் சிறையிலடைக்க, எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

