/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட்-பைக் மோதலில் 2 பெண்கள் பரிதாப பலி
/
மொபட்-பைக் மோதலில் 2 பெண்கள் பரிதாப பலி
ADDED : அக் 04, 2025 01:16 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே, மொபட் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு பெண்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார் அருகேயுள்ள மேட்டூரை சேர்ந்தவர் சிந்து, 28; இவரின் மகள்கள் தேவசேனா, சஷ்மிதா. பெரியூரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து அழைத்து கொண்டு செண்பகபுதுாருக்கு டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில் நேற்று காலை, ௮:௩௦ மணிக்கு சென்றார்.
அம்பேத்கர் நகர் பகுதியில் சென்றபோது, எதிரே ஸ்பிளண்டர் பைக்கில் சரத்குமார், தனது தாயார் பழனியம்மாள், 60, என்பவருடன் வந்தார். எதிர்பாராதவிதமாக மொபட்டும், பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில், சிந்து மற்றும் பழனியம்மாள் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
விபத்தில் காயமடைந்த தேவசேனா, சஷ்மிதா, சரத்குமார் என மூவரும், சத்தி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மொபட், டூவீலர் மோதிக் கொண்டதில் ௨ பெண்கள் பலியானதுடன், ௩பேர் பலத்த காயமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.