sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோட்டத்தில் நுழைந்த யானைகள் சேதமான 200 வாழை மரங்கள்

/

தோட்டத்தில் நுழைந்த யானைகள் சேதமான 200 வாழை மரங்கள்

தோட்டத்தில் நுழைந்த யானைகள் சேதமான 200 வாழை மரங்கள்

தோட்டத்தில் நுழைந்த யானைகள் சேதமான 200 வாழை மரங்கள்


ADDED : நவ 20, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அருகே, விவசாய நிலங்களில் புகும் காட்டு யானைகள் வாழை மற்றும் விவசாய பயிர்களை தொடர்ந்து சேதம் செய்து வருகின்றன.

பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் மற்றும் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 5 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக புதுப்பீர்

கடவு ஊராட்சிக்குட்பட்ட புதுக்காடு பகுதியில் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள, விவசாயி ஜனனி பிரியா தோட்டத்திற்குள் புகுந்த, 5 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த, ஜி 9 ரக வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. அப்போது தங்கியிருந்த தொழிலாளர்கள், அருகில் விவசாயிகள் காட்டு யானைகள் நடமாடுவதை கண்டு அச்சமடைந்தனர். பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனாலும், 200க்கும் மேற்பட்ட வாழை மரங்களை யானைகள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதை தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை நீண்ட போரா ட்டத்திற்கு பின், வனப்

பகுதிக்குள் விரட்டினர்.






      Dinamalar
      Follow us