/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
/
263 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : பிப் 16, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் முத்துார் பேரூராட்சி, வெள்ளகோவில், காங்-கேயம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, 263 கர்ப்பி-ணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழா முத்-துாரில் நேற்று நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சீர் வரிசை பொருட்களை வழங்கியும், தனது சொந்த நிதியில் தலா, ௧,௦௦௦ ரூபாய் வழங்கினார். முன்ன-தாக முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.