ADDED : ஆக 25, 2025 02:47 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்,: பண்ணாரி கோவில் பகுதியில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று ரோந்தில் ஈடுட்டிருந்தனர். அப்போது கோவில் மண்டபத்தில் சிலர் சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கோவையை சேர்ந்த வெங்கடேஷ், சிவசாமி, குமார் உள்ளிட்ட ஆறு பேர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வினோத், பாபு, சந்திரா, சுதாகர், புனித்ராஜ், ராஜேஷ், கணேஷா உள்ளிட்ட, 15 பேர் என தெரிந்தது. 21 பேரையும் கைது செய்து, 2.15 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல் கொண்டமுத்தனுாரில் சூதாடிய புதுகொத்து காட்டை சேர்ந்த திருமூர்த்தி, 47, வெங்கடசாலம், 39, குமார், 39, சர-வணன், 40, பழனிசாமி, 47, ராமசாமி, 57, என ஆறு பேரை கைது
செய்தனர்.
