/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 330 மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 12, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, 330 மனுக்கள் பெறப்பட்டன. 11 பழங்குடியின மக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் உட்பட பலர் பங்கேற்றனர்.