sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மூவரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

/

மூவரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

மூவரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

மூவரை கடத்தி ரூ.5 லட்சம் பறித்த 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது


ADDED : பிப் 16, 2024 10:22 AM

Google News

ADDED : பிப் 16, 2024 10:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் கலா, 44; கணவர் இறந்து விட்டார். ஒரு மகன் உள்ளார். கலாவுக்கு தொழில் ரீதியாக பரமத்தி வேலுாரை சேர்ந்த சுதா, 43, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த ஜெகதீஸ், 42, என்பவரை, கலாவுக்கு சுதா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடந்த, 2023 அக்., 21ம் தேதி பழநி அருகே தொழில் ரீதியாக, ஒரு இடத்தை பார்வையிட, கலாவை நேரில் வருமாறு ஜெகதீஸ் அழைத்துள்ளார். இதை நம்பி நண்பர் கிருஷ்ணமூர்த்தி, 44, டிரைவர் கார்த்திக், 35, ஆகியோருடன் காரில், 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

காங்கேயம் வழியாக கார் சென்றபோது, நள்ளிரவில் மற்றொரு காரில் வந்த கும்பல், கலா காரை மறித்தனர். மூவரையும் மிரட்டி கடத்தி சென்றனர். காங்கேயம் அருகே படியூரில் இந்தராணி என்பவரின் வீட்டில் ஒரு நாள் முழுதும் அடைத்து வைத்தனர்.

கலாவிடம் இருந்து, 5 லட்சம் ரூபாய், அவர் அணிந்திருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு, கொடுவாய் அருகே கண்களை கட்டி இறக்கி விட்டு சென்றனர். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

வீட்டுக்கு சென்ற கலா உள்பட மூவரும், தங்களை கடத்தி பணம், நகை பறித்தைத யாரிடமும் சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் தாய் கலாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரது மகன் கேட்டுள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை அவர் கூறியுள்ளார். இதையடுத்து கலா, அவரது மகன் காங்கேயம் போலீசில் புகாரளித்தனர். இதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தல் கும்பலை தேடினர்.

இந்நிலையில் கடத்தல் தொடர்பாக சுதா, இந்திராணி, திருப்பூர் வீரபாண்டி கார்த்திகேயன், 35, திருப்பூர் பெருந்தொழுவு சந்தோஷ், 34, பாண்டிதுரை, 39, என ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர். கடத்தலில் தொடர்புடைய ஜெகதீஸ் உள்பட நான்கு பேரை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us