ADDED : அக் 11, 2024 01:15 AM
சந்தைக்கு வரத்தான
650 மாடுகள்
ஈரோடு, அக். 11-
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகளை அழைத்து வந்திருந்தனர். சந்தையில், 6,000 ரூபாய் முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 50 கன்றுகள் 20,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 23,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 65,000 ரூபாய்க்கு மேல், ஒரு லட்சம் ரூபாய் வரை கலப்பின மாடுகளும் வந்தன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில விவசாயிகள், வியாபாரிகள் அதிகம் வந்தனர். பசு மாடுகள், கன்றுகள், கலப்பின மாடுகளை அதிக ஆர்வமாக வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 85 சதவீதம்
விற்பனையானது.