ADDED : செப் 16, 2026 06:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள், வர்த்தக அமைப்புகள் சார்பில், 1,646 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கடந்த, 14ல், 497 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. நேற்று, 175 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சதுர்த்தி விழா, விசர்ஜன ஊர்வல பாதுகாப்பு பணிக்காக சேலம், கோவையில் இருந்து, 80 பட்டாலியன் போலீசார் ஈரோடு வந்துள்ளனர். இவர்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
