ADDED : அக் 29, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை சேனடோரியம் வசந்தம் பார்க் சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; கார்மெண்ட்ஸ் தொழிலாளி. இவர் மகன் சென்னையில் பணியாற்றுகிறார். மகனை பார்க்க மனைவியுடன் ரவிச்சந்திரன் கடந்த, 22ல் சென்றார். கடந்த, 27ம் தேதி காலை வந்தார்.
வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஏழு பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி பெருந்துறை போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

