sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கலை திருவிழாவில் 7,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

/

கலை திருவிழாவில் 7,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

கலை திருவிழாவில் 7,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

கலை திருவிழாவில் 7,000 பேர் பங்கேற்க ஏற்பாடு


ADDED : நவ 22, 2024 01:16 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, நவ. 22-

நடப்பாண்டுக்கான கலைத்திருவிழா ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நடந்து வருகிறது. பள்ளி, குறுவள, வட்டார, மாவட்ட அளவிலான கலை திருவிழா ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. மாநில போட்டியில் பங்கேற்பதற்கான மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கல்வி துறையினர் கூறியதாவது: டிச., ௫, ௬ல் ஈரோடு மாவட்டத்தில் ஒன்பது, 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாநில கலை திருவிழா போட்டி நடக்கிறது.

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஒருவர் அல்லது ஒரு குழு மட்டுமே மாநில போட்டியில் பங்கேற்கும். அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கு தனித்தனியே போட்டி நடத்தப்படும். போட்டிக்கான மேடை அமைப்பு, ஒலி-ஒளி அமைப்பு,பேனர், தண்ணீர், உணவு, டீ,தங்குமிட செலவினம், நடுவர் மதிப்பூதியம், இதர செலவினங்களுக்காக ஈரோடு மாவட்டத்துக்கு, 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, ௭,௦௦௦ பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் தங்குவதற்கான இடம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையினர் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us