/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது
/
ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது
ADDED : நவ 05, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆட்டோ டிரைவர்கள்
மோதலில் 9 பேர் கைது
பவானி, நவ. 5-
பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர், பவானியை சேர்ந்த செல்லவேல், 45; பவானியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், 55; இருவருக்கும் பழைய ஆட்டோ வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இரு தரப்பினரும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரில், பவானி போலீசார் விசாரித்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் செல்லவேல், ரமேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மற்றும் பவானி கிளை சிறைகளில் அடைத்தனர்.