/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மாதிரி பள்ளிக்கு 9 ஆசிரியர் நியமனம்
/
அரசு மாதிரி பள்ளிக்கு 9 ஆசிரியர் நியமனம்
ADDED : செப் 09, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழக அரசு சில தினங்களுக்கு முன், ஆசிரியர்களை பணி நியமனம் செய்து உத்தரவு வழங்கியது. இதன்படி ஈரோடு மாவட்டத்துக்கு ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கணிதம், தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், அறிவியல் பாட ஆசிரியர்கள். அனைவரும் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள, மாதிரி மேல்நிலை பள்ளியில் (எலைட் பள்ளி) நேற்று பணியில் சேர்ந்தனர்.