sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டில் கொள்ளையடித்த கும்பல்; ஒருவரை பிடித்த உரிமையாளர்

/

வீட்டில் கொள்ளையடித்த கும்பல்; ஒருவரை பிடித்த உரிமையாளர்

வீட்டில் கொள்ளையடித்த கும்பல்; ஒருவரை பிடித்த உரிமையாளர்

வீட்டில் கொள்ளையடித்த கும்பல்; ஒருவரை பிடித்த உரிமையாளர்


ADDED : மே 29, 2024 07:17 AM

Google News

ADDED : மே 29, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு, பெரிய சேமூர், எல்லப்பாளையம் சாலை, கன்னிமார் நகரை சேர்ந்தவர் சண்முகன், 34; வெல்டிங் பட்டறை வைத்துள்ளார்.

சண்முகனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. திருச்சியில் உள்ள மனைவி, குழந்தைகளை பார்க்க, 25ம் தேதி இரவு சென்றார்.நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டில் மின் விளக்கு எரிந்தது. மர்ம நபர்கள் நடமாடுவது தெரியவந்தது. சத்தமிட்டபடி வீட்டுக்குள் சென்றார். வீட்டில் இருந்த ஆசாமிகள் பின்புறம் வழியே தப்பியோடினர். துரத்தி சென்றதில் ஒருவர் பிடிபட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். சண்முகன் வீட்டில் இருந்து, 12 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய், 800 கிராம் வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.பிடிபட்ட நபர் பெங்களூரு, ராஜன் நகர், அஸ்வத், 35, என தெரியவந்தது. கன்னடம், ஹிந்தி பேசுகிறார். அதேசமயம் அவரிடம் திருட்டு போன பொருட்கள் இல்லை. அவருடன் வந்த இருவரிடம்தான் திருடப்பட்ட பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்பிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us