/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு பெருந்துறை எம்.எல்.ஏ., அழைப்பு
/
இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு பெருந்துறை எம்.எல்.ஏ., அழைப்பு
இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு பெருந்துறை எம்.எல்.ஏ., அழைப்பு
இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு பெருந்துறை எம்.எல்.ஏ., அழைப்பு
ADDED : மார் 08, 2026 08:07 AM
பெருந்துறை:பெருந்துறை
எம்.எல்.ஏ.,வும், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளருமான ஜெயகுமார்
வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க., பொது
செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலை-வருமான பழனிசாமி,
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை
லட்சியமாக கொண்டு, தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக
பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு
மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்று பயண பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, 4:00 மணியளவில் பெருந்துறை,
காஞ்சிக்கோவில் சாலை, தாய் நகர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள திடலில்
பிரசாரம் மேற்கொள்-கிறார்.
அதுசமயம் பெருந்துறை சட்டமன்ற
தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க., ஒன்றிய, மாவட்ட, கிளை கழகம் மற்றும்
அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் அலைகடலென
திரண்டு வந்து, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொது செய-லாளருமான
பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டும். மீண்டும் அவரை
தமிழக முதல்வராக, அனைத்து தொண்டர்களும், அவரது கரத்தை வலுப்படுத்த
வேண்டும். அனைவரும் இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

