ADDED : ஜூலை 25, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு, சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஆதித்யன், 31; இவரின் மனைவி மவுபிகா, 28; காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமையல்
தொழில் செய்து வந்த ஆதித்யனுக்கு, மது பழக்கம் இருந்ததால்,
குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். 10 நாட்களுக்கு
முன் ஏற்பட்ட தகராறில், மவுபிகா கோபித்து கொண்டு, பெற்றோர்
வீட்டுக்கு சென்றுவிட்டார். மனவேதனை அடைந்த ஆதித்யன், நேற்று
முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
