sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, காங்.,-தி.மு.க., தூண்டி விடுகிறது'

/

'டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, காங்.,-தி.மு.க., தூண்டி விடுகிறது'

'டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, காங்.,-தி.மு.க., தூண்டி விடுகிறது'

'டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, காங்.,-தி.மு.க., தூண்டி விடுகிறது'


ADDED : பிப் 15, 2024 12:37 PM

Google News

ADDED : பிப் 15, 2024 12:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''டில்லியில் நடைபெறும் போராட்டத்தை ஆம்ஆத்மி, தி.மு.க., துாண்டி விடுகிறது,'' என, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறினார்.

ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., தொழில் பிரிவு மாநாடு, அவல் பூந்துறையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வேதானந்தம், லோக்சபா தொகுதி அமைப்பாளர் பழனிசாமி, இணை அமைப்பாளர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

இதில் பங்கேற்ற, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: சோமனுார் விசைத்தறி கூடம், பல்லடம் கோழி பண்ணைகள், நாமக்கல் போர்வெல் தொழிற்சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. பாரம்பரிய தொழில்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா பகுதியில், 20 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி, 9 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அக்சயா என்னும் சன்ன ரக அரிசிக்கான நெல்லை வேளாண் துறை உற்பத்தி செய்து தராததால் விலை உயர்ந்துள்ளது.

வரும், 17, 18ல் டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான கூட்டத்துக்கு பின், பெரிய கூட்டணி உருவாவதை பார்க்க முடியும். தமிழகத்தில் மதுவிலக்கு துறையை தவிர, பிற எந்த துறையும் லாபகரமாக இயங்கவில்லை. தமிழகத்தில், கூடிய விரைவில் மிகப்பெரிய மாற்றத்துக்காக காத்து கொண்டிருக்கிறோம். காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி பா.ஜ.,வில் இணைவது அவரது விருப்பம். தேசத்தின் மீது பற்றுள்ள யார் வேண்டுமானாலும் இணையலாம்.

டில்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல. இடைத்தரகர்கள் தான். ஆம் ஆத்மி - தி.மு.க., - காங்., போராட்டத்தை துாண்டி விட்டுள்ளனர். படித்த படிப்புக்கு ஏற்றவாறு, கொ.ம.தே.க., பொதுச் செயலர் ஈஸ்வரன் பேச வேண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா வரவேற்கத்தக்கது. தலைமறைவாக உள்ள அவரது சகோதரரையும் பிடிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us