sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புளியம்பட்டி அருகே கோர விபத்து மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி

/

புளியம்பட்டி அருகே கோர விபத்து மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி

புளியம்பட்டி அருகே கோர விபத்து மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி

புளியம்பட்டி அருகே கோர விபத்து மார்பில் கம்பி பாய்ந்து வாலிபர் பலி


ADDED : அக் 20, 2024 04:08 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே அரசு பஸ்-ஈச்சர் லாரி மோதிக்கொண்ட விபத்தில், இரும்பு கம்பி மார்பில் பாய்ந்ததில், பஸ்சில் பயணித்த வாலிபர் பலியானார்.

கோவையிலிருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன், அரசு பஸ் நேற்று மதியம், ௩:௩௦ மணிக்கு புறப்பட்டது.

டிரைவர் சிவலிங்கம், 43, ஓட்டினார். புன்செய்புளியம்பட்டி அருகே புதுரோடு அரசு மறுவாழ்வு இல்லம் அருகே வளைவில், மாலை, ௫:௦௦ மணியளவில் திரும்பியது. அப்போது எதிரே அட்டை பாரம் ஏற்றிந்த ஈச்சர் லாரி, அரசு பஸ் வலதுபுற பக்கவாட்டில் மோதியது. இதில் லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கணேசன், 35; பஸ் பயணிகள், ௧௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பஸ்ஸின் வலது புறம் கடைசி இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்து பயணித்த, சத்தி அருகே கொண்டப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகன் நதீஷ், 21, மீது, விபத்தில் உடைந்த அரசு பஸ்ஸின் பக்கவாட்டு கம்பி, மார்பில் குத்தி முதுகு வழியாக வந்து விட்டது. கவலைக்கிடமான நிலையில் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் பலியான நதீஷ், சமீபத்தில்தான் கல்லுாரி முடித்து, ஒரு கோச்சிங் சென்டரில் படித்து வந்ததாக, புன்செய்புளியம்பட்டி போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us