/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணித்த ஆதியோகி ரதம்
/
ஈரோட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணித்த ஆதியோகி ரதம்
ஈரோட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணித்த ஆதியோகி ரதம்
ஈரோட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணித்த ஆதியோகி ரதம்
ADDED : ஜன 21, 2025 12:26 PM

ஈரோட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆதியோகி ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் பங்கேற்று ஆதியோகியை மனமுருக தரிசினம் செய்தனர்.
ஈஷாவில் 31-வது மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி, தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்படும் இந்த யாத்திரையானது பொங்கல் தினமான மார்ச் 14-ம் தேதி ஈரோட்டிற்கு வருகை தந்தது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய ரதத்திற்கு பொதுமக்களும் பக்தர்களும் ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்.
ஈரோடு நகரில் நால்ரோடு, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஆதியோகியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மாலையில் செட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஏ.ஆர்.ஆர் மண்டபம் முன்பாக பழனி பாத யாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதியோகிக்கு ஆரத்தி காட்டியும், மலர்களை அர்ப்பணித்தும் பக்தியுடன் வழிப்பட்டனர்.
2-ம் நாளான நேற்று கஸ்பாபேட்டையில் உள்ள சத்தீஸ்வரர் கோவில் முன்பாக ஆதியோகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் 1,008 தீபங்களை ஆதியோகிக்கு அர்ப்பணித்தனர்.
கோவை ஈஷா யோக மையத்திற்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசனம் செய்ய முடியாதவர்கள் தங்கள் ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காக இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. மேலும், ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்கும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த ஆதியோகி ரதம் இம்மாத இறுதியில் ஈரோட்டின் புறநகர் பகுதிகளுக்கு பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

