ADDED : செப் 03, 2026 05:54 AM
ஈரோடு:ஈரோடு முதன்மை கல்வி அலுவலர்
அலுவலக கூட்டரங்கில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில்,
100 சதவீதம் பாட வாரியாக வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
நேற்று நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, 1,165 ஆசிரியை, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நடப்பு
கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறுவது
தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது.
மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பாடங்கள், நடப்பு
கல்வியாண்டில் மாத தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டு ஆய்வு செய்து,
பாட வாரியாக மாணவ, -மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பது குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கணக்கியல், வணிகவியல்,
இயற்பியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி நடந்தது. வரும் 9 வரை பயிற்சி
அளிக்கப்பட உள்ளது.
