sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவரை தேடி வேளாண் துறை திட்டம்' மாதம் இருமுறை நடக்கும் என அறிவிப்பு

/

உழவரை தேடி வேளாண் துறை திட்டம்' மாதம் இருமுறை நடக்கும் என அறிவிப்பு

உழவரை தேடி வேளாண் துறை திட்டம்' மாதம் இருமுறை நடக்கும் என அறிவிப்பு

உழவரை தேடி வேளாண் துறை திட்டம்' மாதம் இருமுறை நடக்கும் என அறிவிப்பு


ADDED : மே 30, 2025 01:00 AM

Google News

ADDED : மே 30, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :'உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று துவக்கி வைத்தார். கதிரம்பட்டி பஞ்.,ல் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் விழா நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 25 பயனாளிகளுக்கு, 11.78 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார்.

மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளை சந்தித்து, வேளாண் துறை, அது சார்ந்த துறைகளை ஒருங்கிணைத்து நலத்திட்டம், தொழில் நுட்பங்களை விளக்க இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமையில் இரு குழு அமைத்து தலா, 15 நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு மாதமும், 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் குறிப்பிட்ட கிராமங்களில் முகாம் நடத்தவுள்ளனர்.

இதில் வேளாண்மை, கூட்டுறவு, கால்நடை, வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள், மீன் வளத்துறை என அனைத்து துறைகளின் வட்டார அளவிலான அலுவலர்கள், விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவர்.






      Dinamalar
      Follow us