/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்
/
வேட்டை தடுப்பு காவலர் பாம்பு கடித்ததில் காயம்
ADDED : மார் 31, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூர்மலை
பசுவனாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்தில், நேற்று முன்தினம் இரவு
நாகப்பாம்பு புகுந்து விட்டதாக, கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.
அங்கு சென்ற வேட்டை தடுப்பு காவலர் ராமசாமி பாம்பை பிடிக்கும் பணியில்
ஈடுபட்டார். எதிர்பாராத விதமாக வலது கையில் பாம்பு கடித்-ததில்
காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். கடம்பூர் வனத்துறையில் பாம்பு பிடிக்க போதிய பாதுகாப்பு
உபகரணங்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.