ADDED : பிப் 21, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தமிழகத்தில்
பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி
வினியோகிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில்,
தஞ்சாவூரில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூரில் இருந்து
தனி சரக்கு ரயிலில், 2,300 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ரயில்
நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு வந்தது. சுமை துாக்கும்
தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள
நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.

