sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்

/

ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்

ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்

ஆறு மாதத்துக்கு பின் வந்த யானைகளால் வாழை சேதம்


ADDED : ஜூலை 11, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியேறிய இரண்டு யானைகள், புன்செய்புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் நடமாடின.

இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர். சிறிது நேரம் நடமாடிய யானைகள் சத்தி-மேட்டுப்பாளையம் சாலையை கடந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள கரிதொட்டம்பாளையம் கிராமத்துக்குள் புகுந்தது.

விவசாய நிலங்கள் வழியாக சென்ற யானைகள், வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து, பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆறு மாதங்களுக்கு பிறகு,யானைகள் மீண்டும்,வனப்பகுதியை ஒட்டியுள்ள, கிராமத்துக்குள் புகுந்ததால் விவசாயிகள்

பீதியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us