/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பனியன் நிறுவனங்கள் சம்பள பட்டுவாடா கட்டுப்பாடுடன் பணம் எடுக்க முடியுமா
/
பனியன் நிறுவனங்கள் சம்பள பட்டுவாடா கட்டுப்பாடுடன் பணம் எடுக்க முடியுமா
பனியன் நிறுவனங்கள் சம்பள பட்டுவாடா கட்டுப்பாடுடன் பணம் எடுக்க முடியுமா
பனியன் நிறுவனங்கள் சம்பள பட்டுவாடா கட்டுப்பாடுடன் பணம் எடுக்க முடியுமா
ADDED : மார் 23, 2024 07:55 AM
திருப்பூர் : திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள், வாரந்தோறும் சனிக்கிழமை, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குகின்றன. பெரிய நிறுவனங்கள், ஆன்லைன் மூலமாக, வங்கி கணக்கில் சம்பளம் வழங்குகின்றன.
குறு, சிறு நிறுவனங்கள், அடிப்படை தொழிலாளருக்கும், வடமாநில தொழிலாளருக்கும், ரொக்கமாக சம்பளம் வழங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. நகரப்பகுதியில் மட்டும், கோடிக்கணக்கான ரூபாய் அன்று பரிவர்த்தனையாகும். இன்று சம்பள நாள் என்பதால், வாகன தணிக்கையை கடந்து பணத்தை கொண்டு செல்ல வசதியாக, சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டுமென, வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: சம்பளம் வழங்க, அதிக அளவு ரொக்கம் கையாள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். எனவே, நிறுவன அலுவலர், பணம் எடுக்க காசோலையை பயன்படுத்த வேண்டும். காசோலையை நகல் எடுத்து வந்தால், அதில், கையொப்பமிட்டு, வங்கி சீல் வைத்து கொடுக்க வாய்ப்புள்ளது. மேலும், ரூபாய் நோட்டு விவரங்களையும், பணம் எடுக்கும் நபரின் மொபைல் எண் விவரங்களையும் குறிப்பிட முடியும்.
மாறாக, வேறு எந்தவொரு படிவமும் வங்கிகள் வழங்குவதில்லை. வாடிக்கையாளர், காசோலை நகல் முறையை பின்பற்றலாம். மேலும், சம்பளமாக வழங்க வேண்டிய பட்டியலையும், உடன் வைத்திருக்க வேண்டும். இத்தகைய ஆவணங்களை வைத்திருந்தால், வாகன தணிக்கையை எளிதாக கடந்து செல்ல முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

