sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் அணை நீர்வரத்து 3,181 கனஅடியாக அதிகரிப்பு

/

பவானிசாகர் அணை நீர்வரத்து 3,181 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து 3,181 கனஅடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை நீர்வரத்து 3,181 கனஅடியாக அதிகரிப்பு


ADDED : அக் 01, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து, 3,181 கன அடியாக அதிகரித்-துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானி-சாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில நாட்களாக பவானி-சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகு-தியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 1,403 கன அடியாக இருந்த நிலையில் நேற்று நீர்வரத்து, 3,181 கன அடியாக அதிகரித்-துள்ளது. அணை நீர்மட்டம், 88.76 அடியாகவும், நீர் இருப்பு, 20.7 டி.எம்.சி., ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்-பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன்-கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீரும் என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us