ADDED : ஜூன் 25, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பீகார்
மாநிலம் சமஸ்டிபூரை சேர்ந்தவர் சீதாராம் சதா, 40. கொடுமுடி, வெற்றி
கோனார்பாளையத்தில் ஓம் சக்தி காயர் மில்லில், 6 மாதமாக வேலை செய்தார்.
கடந்த, 22 இரவு தனது அறைக்கு படுக்க சென்றார். மறுநாள் காலை
எழுந்திருக்கவில்லை. பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடல்
குளிர்ச்சியாக விரைத்து இருந்தது.
கொடுமுடி அரசு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த
டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து
பீகாரில் உள்ள சீதாராம் சதாவின் மனைவி, உறவினர்களுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடுமுடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
