ADDED : ஜூலை 23, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 25; டூவீலர் மெக்கானிக். ஆர்-15 பைக் சமீபத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். பெயர், முகவரி மாற்றம் செய்யப்படாத நிலையில், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு போய் விட்டது.
இதனிடையே பைக்கை மர்ம ஆசாமிகள் இருவர் திருடி செல்லும் 'சிசிடிவி' கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதன் அடிப்படையில் கருங்கல்பாளையம் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.* கொடுமுடி கடைவீதியை சேர்ந்தவர் கோபி, 48; வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இவருடைய பஜாஜ் டிஸ்கவர் பைக்கும் மாயமானது. புகாரின்படி கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

