/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் வழியாக திருப்பதிக்கு பஸ்
/
அந்தியூர் வழியாக திருப்பதிக்கு பஸ்
ADDED : ஜூன் 04, 2025 01:01 AM
அந்தியூர், அந்தியூர் தொகுதி மக்கள் நீண்ட காலமாக, அந்தியூர் வழியாக திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருப்பதிக்கு செல்லும் அதிவிரைவு சொகுசு பஸ் சேவை நேற்று தொடங்கியது.
எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் மாலை, 6:30 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த பஸ், சத்தி, அத்தாணி வழியாக இரவு, 8:30 மணிக்கு அந்தியூர் வரும்.
அந்தியூரிலிருந்து, 9:௦௦ மணிக்கு புறப்பட்டு, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார் வழியாக அதிகாலை, 5:30 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில், திருப்பதியில் இருந்து, இரவு 7:30 மணிக்கு புறப்படும் ஒரு பஸ், அந்தியூர் வழியாக கோவைக்கு செல்லும்.
அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு கட்டணமாக, 455 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.