ADDED : ஜூலை 12, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரயில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மதியம் வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் பொது பெட்டியில் சோதனை செய்ததில், கேட்பாரின்றி பை கிடந்தது.
அதை எடுத்து சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அதே பெட்டியில், 850 கிராம் கஞ்சா சாக்லெட்டும் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கஞ்சா, கஞ்சா சாக்லெட் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
