sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் நா.த.க.,வினர் 8 பேர் மீது வழக்கு

/

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் நா.த.க.,வினர் 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் நா.த.க.,வினர் 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் நா.த.க.,வினர் 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 18, 2025 02:34 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்-கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகின்-றனர். ஈரோடு வ.உ.சி., பூங்காவில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழா நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூன்று பேர் முதுகில் போர்டு கட்டி, சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். அந்த போர்டில் சீதாலட்சுமி போட்டோ, அவருக்கு ஓட்டளிக்கும்படி வாசகம் இருந்தது.

அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர், பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுள்ளீர்களா என கேட்டபோது, அனுமதி பெறாதது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் கொடுத்த புகாரின்படி, அனுமதி இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் மீதும், கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதேபோல் வீரப்பன்சத்திரம் பகுதியிலும், அனுமதியின்றி பிர-சாரத்தில் ஈடுபட்டதாக, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்-யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us