sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 85 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

/

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 85 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 85 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 85 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு


ADDED : ஆக 16, 2025 01:42 AM

Google News

ADDED : ஆக 16, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளர்கள், தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தின நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்தனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது அன்று பணிபுரிந்தால் இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வர் அலுவலகத்தில் சமர்பித்து, முன் அனுமதி பெற்று செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

மொத்தம், 47 கடை, நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள், 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 100 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 85 நிறுவனங்களில் நேற்று விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்க, 24 மணி நேரத்துக்கு முன் அறிவிப்பு வழங்கி அதன் நகலை, தொழிலாளர் துறையில் ஒப்புதல் பெறாமலும் இருந்தது தெரியவந்தது. அந்நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us