sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு

/

அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு

அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு

அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு


ADDED : மே 28, 2024 07:17 AM

Google News

ADDED : மே 28, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தமிழக அரசின் ஆணைப்படி ஏழு உட்பிரிவினருக்கும், அருந்ததியர் என ஜாதி சான்றிதழ் வழங்குமாறு, சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பட்டியலின மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் சமூகத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி உள் இட ஒதுக்கீடு, 2009ல் அப்போதைய அரசு வழங்கியது. அருந்ததியர் சமூகத்தில் ஏழு உட்பிரிவுகள் சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி, ஆதி ஆந்திரா மற்றும் அருந்ததியர் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தனி உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், வருவாய் துறை ஜாதி சான்றிதழ் வழங்கும்போது மேற்கண்ட உட்பிரிவு பெயர்களில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அருந்ததியர் என குறிப்பிடுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ மற்றும் பொறியியல் கலந்தாய்வு, வேலை வாய்ப்பிலும் தனி உள் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசாணைப்படி (எண்-50, நாள்: 29.04.2009) ஏழு உட்பிரிவினருக்கும் அருந்ததியர் என ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us