ADDED : பிப் 21, 2026 09:16 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: பள்ளி கல்வித்துறை சார்பில் 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசினார். நிகழ்வில் அமெரிக்காவில் செயல்படும் உலக தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் தமிழ் இருக்கை குழுமம் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச திருக்குறள் நுால்களை வழங்கி, திருக்குறள் முற்றோதல் பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் மன்ற போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி, ஒருங்கிணைப்பாளர் வேதநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
