/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி, நகராட்சி அலுவலர் கூட்டம்
/
மாநகராட்சி, நகராட்சி அலுவலர் கூட்டம்
ADDED : ஜூன் 22, 2025 01:03 AM
ஈரோடு, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர் ஒருங்கிணைப்புக் குழு, மாநில கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநகராட்சி, நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்கள் என அறிவித்து, கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சுகாதார அலுவலர்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓய்வூதியர்கள் கூட்டம்
தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சார்பில், ஈரோடு மாநகர கிளைச்சங்க, 17ம் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரமோகன் வரவேற்றார்.
அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களை அரசு பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். வைப்பு தொகை பிடித்தத்தை, 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு உதவித்தொகை ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.