sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது

/

போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது

போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது

போலி நகை கொடுத்து ஏமாற்றிய தம்பதி கைது


ADDED : டிச 23, 2024 09:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் தவமணி, 46; சத்தி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். மாக்கிணாங்கோம்பையை சேர்ந்தவர் பிருந்தா, 29; இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிருந்தா தனது குடும்ப செலவுக்காக, அடிக்கடி தவமணியிடம் பணம் வாங்கினார். இந்த வகையில், 15 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். அதேசமயம் பணத்தை திருப்பி கொடுக்கும் வரை, 53 பவுன் நகைகளை வைத்திருக்குமாறு தவமணியிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணத்தேவை இருந்ததால், அவர் கொடுத்த நகையுடன் தவமணி சென்று, பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு பிருந்தா நகைகளை, வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். கடத்துாரில் ஒரு வங்கியில் நகைகளை அடமானம் வைத்தபோது, அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து தவமணி கேட்டதற்கு, பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறிய பிருந்தா, காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் பணத்தை கேட்ட தவமணிக்கு, பிருந்தாவும், அவரது கணவர் ஆனந்தனும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தவமணி கொடுத்த புகாரின்படி, தம்பதியரை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us