ADDED : ஜூலை 17, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:தாளவாடிமலையில்
உள்ள சூசைபுரத்தை சேர்ந்த விவசாயி வெங்கடசலம், 52; மாடுகள் வளர்த்து
வருகிறார். நேற்று அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு
சிறுத்தை, தோட்டத்தில் கட்டி வைத்திருந்த இரண்டு மாடு, இரண்டு கன்று
குட்டிகளை தாக்கி
கொன்றது.
தகவலறிந்து சென்ற வனத்துறையினர்
ஆய்வு செய்தனர். கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை
கூண்டு வைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
