/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை
/
கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை
ADDED : பிப் 12, 2026 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு ராசிபுரம், இடைப்பாடியில் இருந்து கறிவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடுமையான பனிப்பொழிவால், ஒன்றரை மாதங்களாக வரத்து குறைந்தது. இதனால் கிலோ ரூ.50க்கு விற்ற கறிவேப்பிலை ரூ.100க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
பனிப்பொழிவால் கறிவேப்பிலை செடி கருகி விடுகிறது. எனவே வரத்து குறைகிறது. இதன் எதிரொலியாக விலை அதிக-ரித்து விற்கப்படுகிறது. பனி குறைந்தால் தான் விளைச்சல் அதிக-ரிக்கும். அப்போது வரத்து அதிகரித்து, விலை குறைய
வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.

