/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல்வரிடம் முறையீடு ஆலோசனையில் முடிவு
/
முதல்வரிடம் முறையீடு ஆலோசனையில் முடிவு
ADDED : டிச 02, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. சங்க ஒருங்கிணைப்-பாளர் சின்னசாமி தலைமை வகித்தார். சிப்காட் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி இழப்பீட்டு தொகைகளை அரசே நிர்ணயித்து, விவசாயிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, வரும், 19, 20 தேதிகளில், ஈரோடு மாவட்டத்துக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்னையையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.