sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13

/

ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13

ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13

ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, நவ. 13


ADDED : நவ 13, 2025 01:22 AM

Google News

ADDED : நவ 13, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, தலைமை தபால் அலுவலகம் முன், மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு, ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு சார்பில், செயலர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோட்ட செயலர் கோபிநாத், நிர்வாகிகள் சின்னசாமி, மணியன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

மத்திய அரசின், 8வது ஊதிய உயர்வு குழுவில் உள்ள ஊழியர் விரோத செயல்பாட்டை நீக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, அடிப்படை சம்பளம் மற்றும் அடிப்படை பென்ஷனில், 30 சதவீதம் என, 2026 ஜன., 1 முதல் வழங்க வேண்டும். 50 சதவீத டீ.ஏ., டி.ஆர்., மெர்ஜர், 2024 ஜன., 1 முதல் வழங்க வேண்டும். சம்பளத்துடன் பென்ஷனிலும் உயர்வை வரும் ஜன., 1 முதல் வழங்க வேண்டும். அதற்கேற்ப ஊதியக்குழுவின் பரிசீலனை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும். ஊதியக்குழுவில் பென்ஷன் மறுக்கும் நிதிச்சட்டம், 2025ஐ ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us