sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

 லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது

/

 லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது

 லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது

 லஞ்ச வழக்கில் துணை தாசில்தார் வி.ஏ.ஓ., கைது


ADDED : நவ 13, 2025 02:10 AM

Google News

ADDED : நவ 13, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, மொடச்சூர் அருகே கே.ஏ.எஸ்., நகரைச் சேர்ந்த ஜெயா, 45, தன் தாய் வகையறாவுக்கு உண்டான சொத்தில், தன் தாய் உள்ளிட்டோர் பெயரை பட்டாவில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பித்தார்.

கோபி தாலுகா மண்டல துணை தாசில்தார் மணிமேகலை, 43, என்பவர், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத ஜெயா, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

துணை தாசில்தார் சொன்னபடி, லஞ்ச பணத்தை கலிங்கியம் 'ஆ' கிராமம் வி.ஏ.ஓ., சசிக்குமார், 33, அலுவலகத்தில் வைத்து கொடுத்த போது, நேற்று மாலை போலீசார் அவரை கைது செய்தனர்.

இதற்கு உடந்தையான மணிமேகலையும் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us