sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோதுமை கிடைக்காமல் ரேஷனில் ஏமாற்றம்

/

கோதுமை கிடைக்காமல் ரேஷனில் ஏமாற்றம்

கோதுமை கிடைக்காமல் ரேஷனில் ஏமாற்றம்

கோதுமை கிடைக்காமல் ரேஷனில் ஏமாற்றம்


ADDED : ஏப் 21, 2025 07:29 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசியுடன் ஐந்து கிலோ கோதுமை வழங்கப்பட்டது. மத்திய அரசால் வழங்கப்பட்ட கோதுமை அளவை குறைத்து விட்டதாக கூறி, ஒரு கார்டுக்கு ஒரு கிலோ மட்டுமே வழக்கப்பட்டது. சில மாதங்களாக சென்னிமலையில் இதுவும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், '500 கார்டுகள் உள்ள ரேஷன் கடைக்கு, 200 கிலோ கோதுமை மட்டுமே தருகின்றனர். முதலில் வரும் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ஒரு கிலோ வழங்கப்படுகிறது. மீதி கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மாதமும் அதே அளவுதான் கோதுமை வந்துள்ளது' என்றனர். அதேசமயம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை, 17 ஆயிரம் டன்னாக உயர்த்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதன் பிறகும் அதே அளவிலான கோதுமையே வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us