/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
/
மாநகரில் 2வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 14, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில், சாலையோர ஆக்கி-ரமிப்பை அகற்றும் பணியை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சா-லைத்துறை சார்பில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இரண்டா-வது நாளாக நேற்று பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் இருந்து, மீனாட்சி சுந்தரனார் சாலை இருபுறமும், அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையிலும், மேட்டூர் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் அருகில், சத்திரோடு ரவுண்டானா வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

