ADDED : ஜூலை 17, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு அருகே பேரோட்டை சேர்ந்த விவசாயி
செல்வராஜ், 53; கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியின்றி சிகிச்சை எடுத்து
வந்தார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மாடுகளில் பால் கறந்துவிட்டு,
மாட்டு சாணம் அள்ளியபோது திடீரென மயங்கி விழுந்தார்.
அப்பகுதியினர்
மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
